ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்து விட்டபோதும், அஜித்தை அவரது ரசிகர்கள் விடுவதாக இல்லை. அவர்களாகவே மன்றங்களை வைத்துக்கொண்டு அஜித் படங்கள் வெளியாகும்போது பேனர், கட்அவுட்கள் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு, சமூக வலைதளங்களில் அஜித்தின் போட்டி நடிகர்களுக்கு எதிராக கடும் குரல் கொடுத்து வருகின்றனர். அஜித் சம்பந்தப்படாமலேயே அவருக்கு தானாக சேர்ந்த ரசிகர்கள் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள்.
மேலும், வேதாளம் படத்திற்கு பிறகு தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் சில மாதங்களாக ஓய்வில் இருந்தார். அதையடுத்து அவர் மீண்டும் சிவா இயக்கத்தில் தனது 57வது படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், திடீரென்று குடும்பத்துடன் வெளிநாடு புறப்பட்டு சென்றார் அஜித். இந்நிலையில், ஜூலை மாதம் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விடும் என்கிறார்கள். இதற்கிடையே, மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள், அவரது 57வது படத்தை வரவேற்கும் வகையில், சுமார் 100 அடி நீளத்தில் அஜித்தின் போஸ்டரை ஒட்டி, 57வது படத்திற்காக தாங்கள் காத்துக்கொண்டிருப்பது போன்ற வாசகத்தையும் அதில் பதிவு செய்துள்ளனர்